முக்கிய செய்திகள்

Saturday, October 25, 2008

கொட்டும் மழையிலும் மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது(படங்கள்)

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு கருணாநிதி, மனிதச் சங்கிலி அணிவகுப்பை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அண்ணாசாலை பெரியார் சிலை அருகே மனிதச் சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

சிறுசேமிப்பு குழு துணைத் தலைவர் ரகுமான்கான், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜே அன்பழகன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், ஜனநாயக முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

ஏராளமான பெண்களும் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே மனிதச் சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்


நன்றி-www.tamilwin.com

0 comments:

  © Blogger template Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP