ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு
இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. |
இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். இதனை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே பல விதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் 22 ஓக்டோபர் 2008 அன்று வெளிவந்த செய்தி இதழில் இருந்து ஒரு சிறிய பகுதியை இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம். News By-Tamilwin.com |
0 comments:
Post a Comment